உள்ளூர் செய்திகள்

ஏர்வாடியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2023-10-26 09:02 GMT   |   Update On 2023-10-26 09:02 GMT
  • சேசையாபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ், போலீசார் ரோந்து சென்றனர்.
  • கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

களக்காடு:

ஏர்வாடி சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் மற்றும் போலீசார் சேசையா புரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஏர்வாடி உப்பு நடுத்தெருவை சேர்ந்த சதாம் உசேன் (வயது 22), 6-ம் தெருவை சேர்ந்த முகம்மது அலி உசேன் (21) ஆகியோர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News