உள்ளூர் செய்திகள்
சங்கரன்கோவில் அருகே மணல் அள்ளிய 2 பேர் கைது; ஜே.சி.பி., டிப்பர் லாரி பறிமுதல்
- சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் போலீசார் மாயம்பாறை அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
- கே.வி ஆலங்குளத்தைச் சேர்ந்த ராஜசேகர், இலவங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் ஆகியோர் அங்குள்ள ஓடையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் போலீசார் மாயம்பாறை அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சங்கரன்கோவில் அருகே உள்ள கே.வி ஆலங்குளத்தைச் சேர்ந்த ராஜசேகர் (29), இலவங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் (21), ஆகியோர் அங்குள்ள ஓடையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர். இதுகுறித்து சின்னக் கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகர், மதன்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த டிப்பர் லாரி, ஜே.சி.பி. எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்களை மணல் அள்ள தூண்டுதலாக இருந்த தர்மத்தூரணியைச் சேர்ந்த கருப்பசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.