உள்ளூர் செய்திகள்

மரக்காணத்தில் சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2022-09-12 06:28 GMT   |   Update On 2022-09-12 06:28 GMT
  • அமரன், ஆறுமுகம், ரவி ஆகிய 3 பேர் சாராயம் விற்பனை செய்வதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • ஆறுமுகம் தப்பித்து ஓடி விட்டார். அமரன், ரவி ஆகிய 2 பேரை கைது செய்து திண்டிவனம் சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம்:

மரக்காணத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர்கள் அமரன், ஆறுமுகம், ரவி ஆகிய 3 பேர் சாராயம் விற்பனை செய்வதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் மரக்காணம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் மரக்காணத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் ஆய்வு செய்தனர். அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அமரன் (வயது 29). ரவி (32), ஆறுமுகம் (42) ஆகியோரை பிடித்தனர். இதில் ஆறுமுகம் தப்பித்து ஓடி விட்டார். அமரன், ரவி ஆகிய 2 பேரை கைது செய்து திண்டிவனம் சிறையில் அடைத்தனர். இவர்களிலிருந்து100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News