உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி அருகே பெண் உள்பட 2 பேர் மாயம்

Published On 2022-06-12 04:43 GMT   |   Update On 2022-06-12 04:43 GMT
  • தேனி அருகே கல்லூரி மாணவி மாயமானார்
  • மாயமான 2 பேர் குறித்து போலீசார் விசாரணை

தேனி:

தேனி பாரஸ்ட் ரோடு 3-வது தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் அபிஷேக்(14). நேற்று வெளியே சென்ற அபிஷேக் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அபிஷேக்கை தேடி வருகின்றனர்.

கேரளமாநிலம் மூணாறை சேர்ந்தவர் காவியாமாலினி(21). இவர் உடுமலைபேட்டையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கே.கே.பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த காவியமாலினி திடீரென மாயமானார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News