உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவி உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2023-02-25 15:06 IST   |   Update On 2023-02-25 15:06:00 IST
  • ஆறுமாதங்களுக்கு முன்பு பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
  • திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்று கூறிவந்த சந்தானா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகேயுள்ள மருதபள்ளி கீழ தெருவை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகள் சந்தானா (வயது 18). கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில் அவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வந்துள்ளனர். ஆனால் தனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்று கூறிவந்த சந்தானா இந்த விவகாரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது தந்தை வரதராஜ் கொடுத்த புகாரின்பேரில் தேன்கனி கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல உத்தனப்பள்ளி அருகேயுள்ள பெலேட்டி கிராமத்தை சேர்ந்த உஷா (32) என்பவர் தனது கணவரின் குடி பழக்கத்தால் மனமுடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது சகோதரர் ராஜேஷ் கொடுத்த புகாரின்பேரில் உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News