உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு இடங்களில் 2 பேர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-06-05 15:26 IST   |   Update On 2023-06-05 15:26:00 IST
  • வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கங்கசத்திரம் பகுதிையைச் சேர்ந்த முரளி (வயது25). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனவேதனை அடைந்த கடந்த 3-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று கர்நாடக மாநிலம் பெங்களூரு அங்கசந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மாருதி (32). இவருக்கும் பெற்றேருக்கும் அடிக்கடி குடும்பதகராறு இருந்து வந்தது. இதனால் மனவேதனையுடன் இருந்த அவர் கடந்த 28-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே நல்லாரம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். அங்கு அவர் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News