உள்ளூர் செய்திகள்
கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது
- கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வீடியோ காட்சிகளின் அடிப்படையிலும், வலைதளங்களை ஆய்வு செய்தும் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஏர்வாய் பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் வல்லரசு (வயது 20). இவர் வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து அதில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை சேர்த்து பள்ளியில் கலவரம் செய்ய தூண்டும் வகையில் தகவல்கள் கருத்துக்களை பதிவு செய்து உள்ளார்.எனவே போலீசார் இவரை கைது செய்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் ஐவதக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த ஞானபிரகாசம் (41). இவர் கலவரத்தினை தூண்டு விதமாக செயல்பட்டார். எனவே சிறப்பு புலனாய்வு குழு போலீசார்வீடியோ காட்சி களின் அடிப்ப டையிலும், வலைதளங்களை ஆய்வு செய்தும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 2பேரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.