உள்ளூர் செய்திகள்

கார் மோதி 2 பேர் பலி

Published On 2022-12-19 09:54 GMT   |   Update On 2022-12-19 09:54 GMT
  • கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  • 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள பெரிய ஜோதிபட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது47), அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஸ் (50). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை போச்சம்பள்ளிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்தேரிபட்டி என்ற இடத்தில் வந்த போது எதிரெ வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மாதேஸ், வெங்கடேஸ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து வந்தனர்.

விபத்தில் பலியான 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News