உள்ளூர் செய்திகள்
பழவேற்காடு பகுதியில் குட்கா விற்ற 2 பேர் கைது
- பழவேற்காடு பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- குட்கா, புகையிலை விற்பனையில் ஈடுபட்ட மஸ்தான்,மதன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி:
பழவேற்காடு பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருப்பாலைவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் அரங்குப்பம் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பனையில் ஈடுபட்ட மஸ்தான்,மதன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.