உள்ளூர் செய்திகள்
ஓட்டப்பிடாரம் அருகே கார்களில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
- சோதனையில், 55 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி கொண்டு சென்றது தெரியவந்தது.
- கார்களை ஓட்டி வந்த இசக்கிவேல், சவரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்தவழியாக வந்த 2 கார்களை மறித்து சோதனை செய்தனர். அதில் 55 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி கொண்டு சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கார்களை ஓட்டி வந்த தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த இசக்கிவேல் (வயது47), மாப்பிள்ளையூரணி சவரிமுத்து ஆகியோரை கைது செய்து 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகளையும், கார்களையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.