உள்ளூர் செய்திகள்

திருவாரூர் அருகே மரத்தில் கார் மோதி 2 பேர் பலி

Published On 2022-07-26 07:45 GMT   |   Update On 2022-07-26 07:45 GMT
  • வேளுக்குடி பகுதியில் வந்தபோது எதிரே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீது வேகமாக மோதியது.
  • சந்திரா, கணபதி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

திருவாரூர்:

நாகை மாவட்டம் பெருங்கடம்பனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சின்னையன் மனைவி சந்திரா (வயது 70).

இவர் தனது உறவினர்களான கணபதி (42) அவரது மகன் சந்தோஷ் (16), ராமச்சந்திரன், அவரது மனைவி விஜயலட்சுமி உள்பட 7 பேருடன் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் உள்ள குலதெய்வம் கோவில் திருவிழாவிற்காக சென்றனர்.

அங்கு திருவிழாவை முடித்து விட்டு மீண்டும் இன்று அங்கிருந்து பெருங்கடம்பனூருக்கு காரில் புறப்பட்டனர். காரை ராமச்சந்திரன் ஓட்டினார்.

அந்த கார் திருவாரூர் அருகே உள்ள வேளுக்குடி பகுதியில் வந்தபோது எதிரே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீது வேகமாக மோதியது. இதில் சந்திரா, கணபதி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ராமச்சந்திரன், அவரது மனைவி விஜயலட்சுமி, அவர்களது குழந்தை ஜெய்ஹரி சாதனா உள்பட 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News