உள்ளூர் செய்திகள்

கிரானைட் கற்கள் கடத்திய 2 பேர் கைது

Published On 2022-12-18 15:10 IST   |   Update On 2022-12-18 15:10:00 IST
  • கனிமவளத்துறை அதிகாரி பொன்னுமணி மற்றும் அலுவலர்கள் வாகன சோதனை நடத்தினர்.
  • 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் சத்தியசீலன்,முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் அச்சமங்கலம் அருகேயுள்ள தனியார் கல்லூரி அருகில் கனிமவளத்துறை அதிகாரி பொன்னுமணி மற்றும் அலுவலர்கள் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அவ்வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி கிரானைட் கற்கள் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து 2 லாரிகளையும் ,கற்களை கடத்தி வந்த பர்கூரை சேர்ந்த சத்தியசீலன், சிங்கம்பட்டியை சேர்ந்த முருகன், மல்லம்பாடியை சேர்ந்த கராமத் பாய், குப்பம் பகுதியை சேர்ந்த சம்பங்கி ஆகியோரையும் கந்திகுப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.

2 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் சத்தியசீலன்,முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News