உள்ளூர் செய்திகள்

கோவையில் நடக்கும் பாம்பே சர்க்கசில் 2 ஆப்பிரிக்க கிளிகள் பறிமுதல்

Published On 2023-07-26 14:36 IST   |   Update On 2023-07-26 14:36:00 IST
  • தன்னார்வலர் ஒருவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
  • புகாரின் பேரில் போலீசார் சர்க்கஸ் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

கோவை,

கோவை வ.உ.சி மைதானத்தில் பாம்பே சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இங்கு நாய்கள், கிளிகளை கொண்டும் சர்க்கஸ் சாகசங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தன்னார்வலர் ஒருவர் பாம்பே சர்க்கசில் கிளிகளை முறையான பதிவு சான்று இல்லாமல் வைத்திருப்பதாகவும் அவற்றை துன்புறுத்துவதாகவும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் சர்க்கஸ் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது பாம்பே சர்க்கசில் ஆப்பிரிக்க மஞ்சள் கிளிகளான (காக்டூ) என்ற 2 வெளிநாட்டு கிளிகளை உரிய பதிவு சான்று இல்லாமல் பொழுது போக்கு நிகழ்ச்சியில் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 2 ஆப்பிரிக்க கிளிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News