உள்ளூர் செய்திகள்
சிப்காட்டை எதிர்த்து 15-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
- எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆர்பாட்டங்களை செய்து வருகின்றனர்.
- விவசாய உபகரணங்கள் களப்பை மற்றும் கருப்பு கொடியை பறக்க விட்டு 15-வது நாளாக உத்தனப்பள்ளி ஆர்.ஐ அலுவலகம் அருகே தொடர்ந்து காத்திப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி மற்றும் அயர்னப்பள்ளி, நாகமங்களம் ஊராட்சி பகுதிகளான விளை நில பகுதிகளில் 6-வது சிப்காட் நில எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆர்பாட்டங்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விவசாய உபகரணங்கள் களப்பை மற்றும் கருப்பு கொடியை பறக்க விட்டு 15-வது நாளாக உத்தனப்பள்ளி ஆர்.ஐ அலுவலகம் அருகே தொடர்ந்து காத்திப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.