உள்ளூர் செய்திகள்

கடந்த 2022-23 ஆம் ஆண்டில் கூடங்குளம் முதல் அணு உலையில் 14,226 மெட்ரிக் யூனிட் மின்சாரம் உற்பத்தி- வளாக இயக்குனர் தகவல்

Published On 2023-08-15 09:13 GMT   |   Update On 2023-08-15 09:13 GMT
  • கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வளாக இயக்குனர் எம்.எஸ்.சுரேஷ் தேசியக்கொடி ஏற்றினார்.
  • கூடங்குளத்தில் 3-வது மற்றும் 4-வது அணு உலை களின் கட்டுமானம் மற்றும் உபகரணங்கள் பொருத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

நெல்லை:

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வளாக இயக்குனர் எம்.எஸ்.சுரேஷ் தேசியக்கொடி ஏற்றினார். இதில் அணுமின் நிலைய ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வளாக இயக்குனர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூடங்குளம் முதல் அணு உலையில் 2022 -23 ஆண்டில் 14,226 மெட்ரிக் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு ள்ளது . கடந்த ஆண்டு தொடர்ச்சியாக 638 நாட்கள் மின் உற்பத்தி செய்து கூடங்குளம் அணு மின் நிலையம் சாதனை படைத்துள்ளது.

கூடங்குளத்தில் 3-வது மற்றும் 4-வது அணு உலை களின் கட்டுமானம் மற்றும் உபகரணங்கள் பொருத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

அணுமின் நிலையம் சார்பில் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இதுவரை அருகில் உள்ள கிராமங்களுக்கு ரூ.104 கோடி மதிப்பீட்டில் பணிகள் செய்யப் பட்டு உள்ளன. ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 193 பள்ளி களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை அணுமின் நிலையம் சார்பில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News