உள்ளூர் செய்திகள்

10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி

Published On 2022-11-10 15:38 IST   |   Update On 2022-11-10 15:38:00 IST
  • 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.
  • நேற்று மாலை அவனை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

சேலம்:

சேலம் கிச்சிபாளையம் எஸ்.எம்.சி காலனி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை அவனை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமடைந்த மாணவன் இரவு 9 மணி அளவில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயற்சி மேற்கொண்டார். இதை கண்ட பெற்றோர் உடனடியாக மகனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவனுக்கு அவசர வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News