உள்ளூர் செய்திகள்

மாவட்ட அளவில் அறிவுத்திறன் போட்டிகள்

Published On 2023-07-27 12:55 IST   |   Update On 2023-07-27 12:55:00 IST
  • பெரம்பலூர் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றது
  • ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

 பெரம்பலூர்,

பெரம்பலூரில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் பொன்விழா ஆண்டை யொட்டி மாவட்ட அளவிலான அறிவுத் திறன் போட்டிகள் நடந்தது.நிகழ்ச்சிக்கு பேரவை தலைவர் வேல் இளங்கோ தலைமை வகித்தார், பொரு ளாளர் புலவர் செம்பியன், இணை செயலாளர் பாவலர் சிற்றரசு ஆகியோர் முன்னி லை வகித்தனர். செயலாளர் முகுந்தன் வரவேற்றார். மாவட்டத்தின் அனைத்து பகுதியிலான 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையி லான மாணவ, மாணவிகள் அறிவுத்திறன் போட்டியில் கலந்து கொண்டனர்.போட்டியின் நடுவர்க ளாக பதியம் சாரங்கபாணி, அகழ் வினோதினி , கவிஞர் தேனரசன், கவியோவியன் ஆகியோர் வெற்றியா ளர்களை தேர்வு செய்தனர். பின்னர் வெற்றிப்பெ ற்றவர்க ளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்ட ப்பட்டது. முடிவில் துணை செயலாளர் சிவானந்தம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News