உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு

Published On 2023-06-07 15:10 IST   |   Update On 2023-06-07 15:10:00 IST
நிலவரசன் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேகேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாரத் (வயது16). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள கால்வாய் அருகே பாரத் நடந்து சென்றான். அப்போது அந்த கால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உல்லட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாக்கப்பன். இவரது மகன் நிலவரசன் (10). இந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுவன் அதேபகுதியில் உள்ள கிணற்றில் நீச்சல் பழகுவதற்காக நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது நிலவரசன் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து தந்தை சாக்கப்பன் ராயக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் உடனே அங்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News