செய்திகள்

இந்திய சந்தையில் மாருதி சுசுகி வேகன்ஆர் ஹேட்ச்பேக் புதிய சாதனை

Published On 2017-09-26 16:30 IST   |   Update On 2017-09-26 16:30:00 IST
மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன்ஆர் ஹேட்ச்பேக் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் 1999-ம் ஆண்டு அறிமுகமான வேகன்ஆர் இதுவரை 20 லட்சம் யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மாருதி சுசுகி நிறுவனம் 1999-ம் ஆண்டு வாக்கில் இந்தயாவில் அறிமுகம் செய்த வேகன்ஆர் ஹேட்ச்பேக் மாடல் இதுவரை 20 லட்சம் யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் கார்களின் டாப் 5 பட்டியலில் கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது.

இந்த சாதனையின் மூலம் இந்தியாவில் 20 லட்சம் யுனிட்களை விற்பனையான மாருதி 800 மற்றும் ஆல்டோ ஹேட்ச்பேக் உள்ளிட்ட மாடல்களுடன் இணைந்துள்ளது.

மாருதி சுசுகி வெளியிட்ட தகவல்களின் படி வேகன்ஆர் மாடல் பெரும்பாலானோருக்கும் முதல் காராக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் வேகன்ஆர் மாடலினை பலமுறை வாங்கியுள்ளனர் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.



இந்தியாவில் 10 லட்சம் யுனிட் விற்பனையை வேகன்ஆர் 2011-ம் ஆண்டு கடந்தது. சமீப ஆண்டுகளில் வேகன்ஆர் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு விற்பனையில் கணிசமான பங்குகளை வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து 79 மாதங்களில் 10 லட்சம் யுனிட்கள் விற்பனையாகியுள்ளது.

முதன்முறையாக 1993-ம் ஆண்டு ஜப்பானில் வேகன்ஆர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் டால் பாய் வடிவமைப்பு கொண்ட முதல் கார் என்ற பெருமையை வேகன்ஆர் கொண்டிருந்தது. ஆரம்ப கால தோற்றம் பலருக்கும் பிடிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து அனைவரும் வங்கக்கூடிய மாடலாக வேகன்ஆர் இருந்தது. இதைத் தொடர்ந்து ஆண்டுகள் கடக்க பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் வசதிகள் சேர்க்கப்பட்டது. 

Similar News