செய்திகள்
கோப்பு படம்

இரண்டு பிரீமியம் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்யும் ஹீரோ மோட்டோகார்ப்

Published On 2018-05-24 11:18 GMT   |   Update On 2018-05-24 11:18 GMT
இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இரண்டு புதிய பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

உலகின் முன்னணி இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 200ஆர் மாடலை வெளியிட இருக்கிறது. 

இந்நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இரண்டு புதிய பிரீமியம் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பிரீமியம் மாடல்களும் Xபல்ஸ் அல்லது எக்ஸ்ட்ரீம் 200ஆர் மாடல்களை சார்ந்து உருவாக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

அந்த வகையில் இரண்டு பிரீமியம் மாடல்களிலும் தற்சயம் எக்ஸ்ட்ரீம் 200ஆர் மற்றும் Xபல்ஸ் 200 மாடல்களில் வழங்கப்பட்டுள்ள 200சிசி இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 18 பிஹெச்பி பவர், 17 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. 


கோப்பு படம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மற்றும் Xபல்ஸ் 200 மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இரண்டு மாடல்களிலும் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்களில் ஒரு மாடல் எக்ஸ்ட்ரீம் 200ஆர் வேரியன்ட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

மற்றொரு மாடல் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக ஃபுல்லி ஃபேர்டு வடிவமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்களின் மற்ற விவரங்கள் அறியப்படாத நிலையில், இவை 2019-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News