செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தனது வாக்கினை பதிவு செய்த காட்சி.

திமுக கூட்டணி நூற்றுக்கு நூறு வெற்றி பெறும்- வாக்களித்த பின் திருமாவளவன் எம்பி பேட்டி

Published On 2021-04-06 09:49 GMT   |   Update On 2021-04-06 09:49 GMT
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் அலை வீசி கொண்டிருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

செந்துறை:

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது சொந்த ஊரான அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்தை உள்ளடக்கிய குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செந்துறை அருகேயுள்ள அங்கனூர் கிராமத்திற்கு இன்று காலை வந்தார்.

அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நீண்ட வரிசையில் நின்று தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் அலை வீசி கொண்டிருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தி.மு.க. கூட்டணி நூற்றுக்கு நூறு வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News