செய்திகள்
வேதாரண்யத்தில் இன்று பிரதமர் மோடி பிரசாரம்: 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு கன்னித்தோப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பேசுகிறார்.
வேதாரண்யம்:
தமிழக சட்டசபைக்கு வருகிற 16-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் பிரசாரம் களை கட்டி உள்ளது. தமிழக தலைவர்கள் தங்கள் கட்சி, கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். தேசிய தலைவர்களும் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி 3 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன்படி கடந்த 6-ந் தமிழகம் வந்த அவர் அன்று மாலை ஓசூரிலும், இரவு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பேசினார்.
அதன் பின்னர் 8-ந் தேதி கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். 3-வது கட்டமாக அவர் இன்று (புதன்கிழமை) நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு கன்னித்தோப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இதற்காக இன்று மதியம் 12.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 3.30 மணிக்கு தஞ்சையில் உள்ள விமான படை தளத்திற்கு வருகிறார். அங்கு கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்கிறார்கள். அதன் பின் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு வேதாரண்யம் தேத்தாக்குடி அல்நூர் பள்ளி எதிரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு வந்தடைகிறார்.
அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு 4.25 மணிக்கு சென்றடைகிறார். பொதுக்கூட்டத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த 18 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா, ஐ.ஜே.கே. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
கூட்டத்தில் மத்திய மந்திரிகள் பொன். ராதாகிருஷ்ணன், பிரகாஷ் ஜவடேகர், தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் முரளிதரராவ், அகில இந்திய பிரசார இணை அமைப்பு யெலாளர் சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
பிரசாரத்தை முடித்து கொண்டு 5.10 மணிக்கு அங்கிருந்து கிளம்பும் மோடி மீண்டும் ஹெலிபேடு தளத்துக்கு வருகிறார். 5.20 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு 6.05 மணிக்கு தஞ்சை விமானப்படை தளம் வந்து தனி விமானம் மூலம் கொச்சி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி வேதாரண்யம் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மத்திய மண்டல ஐ.ஜி. செந்தாமரைக் கண்ணன், மத்திய சிறப்பு பாதுகாப்பு படை ஏ.ஐ.ஜி. சுமித் சிந்தி, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கடற்படை, விமானப்படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக சட்டசபைக்கு வருகிற 16-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் பிரசாரம் களை கட்டி உள்ளது. தமிழக தலைவர்கள் தங்கள் கட்சி, கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். தேசிய தலைவர்களும் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி 3 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன்படி கடந்த 6-ந் தமிழகம் வந்த அவர் அன்று மாலை ஓசூரிலும், இரவு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பேசினார்.
அதன் பின்னர் 8-ந் தேதி கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். 3-வது கட்டமாக அவர் இன்று (புதன்கிழமை) நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு கன்னித்தோப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இதற்காக இன்று மதியம் 12.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 3.30 மணிக்கு தஞ்சையில் உள்ள விமான படை தளத்திற்கு வருகிறார். அங்கு கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்கிறார்கள். அதன் பின் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு வேதாரண்யம் தேத்தாக்குடி அல்நூர் பள்ளி எதிரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு வந்தடைகிறார்.
அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு 4.25 மணிக்கு சென்றடைகிறார். பொதுக்கூட்டத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த 18 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா, ஐ.ஜே.கே. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
கூட்டத்தில் மத்திய மந்திரிகள் பொன். ராதாகிருஷ்ணன், பிரகாஷ் ஜவடேகர், தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் முரளிதரராவ், அகில இந்திய பிரசார இணை அமைப்பு யெலாளர் சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
பிரசாரத்தை முடித்து கொண்டு 5.10 மணிக்கு அங்கிருந்து கிளம்பும் மோடி மீண்டும் ஹெலிபேடு தளத்துக்கு வருகிறார். 5.20 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு 6.05 மணிக்கு தஞ்சை விமானப்படை தளம் வந்து தனி விமானம் மூலம் கொச்சி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி வேதாரண்யம் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மத்திய மண்டல ஐ.ஜி. செந்தாமரைக் கண்ணன், மத்திய சிறப்பு பாதுகாப்பு படை ஏ.ஐ.ஜி. சுமித் சிந்தி, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கடற்படை, விமானப்படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.