செய்திகள்

நாளை மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம்- மு.க.ஸ்டாலின்

Published On 2018-04-04 10:39 IST   |   Update On 2018-04-04 10:39:00 IST
காவிரி உரிமை மீட்பு பயணம் குறித்து நாளை மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

மத்திய அரசை கேள்வி கேட்காத யோக்கியதை இல்லாதவர்கள் முதல்- அமைச்சர், துணை முதல்-அமைச்சர். காவிரி பிரச்சனைக்காக தி.மு.க. நடத்தும் போராட்டங்களை கபட நாடகம் என்று கூறுகிறார்கள்.


தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது. இந்த எண்ணம் இருப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

மத்திய அரசை கண்டித்து அமைச்சரவையில் தீர்மானம் போட முடியாதவர்களின் விமர்சனங்களுக்கு பதில் சொல்லி என்னை தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை.

காவிரி உரிமை மீட்பு பயணம் குறித்து நாளை மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறோம். இதில் காவிரி பிரச்சனை குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

Similar News