செய்திகள்
நடப்பு ஆண்டில் 5½ லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்
நடப்பு ஆண்டில் 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிழக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.83.50 லட்சம் மதிப்பில் 6 புதிய வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவும், நவீன கழிப்பிடங்கள், மிதி வண்டி நிறுத்தம் அரங்கம் திறப்பு விழாவும் இன்று நடந்தது.
சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய வகுப்பறைகள், கட்டிடங்களை திறந்து வைத்தனர்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்கு ரூ.27 ஆயிரத்து 250 கோடியே 33 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு மாணவர்களுக்கு ஒரு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உயர் நிலை பள்ளி படிக்கும் மாணவர்கள் மேல் நிலைப்பள்ளியில் எந்த கல்வியை தேர்ந்தெடுத்து படிக்கலாம் என்பது குறித்தும், மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்கள் எந்த கல்லூரியில் என்ன பாடம் எடுத்து படிக்கலாம் என்பது குறித்தும் குறிப்பிட்டிருக்கும். இதன் மூலம் மேல்நிலை கல்வியில் சிறப்பான தொழிற்கல்வியை மாணவர்கள் பெற முடியும்.
மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு தேர்வையும் எதிர் கொள்ளும் வகையில் நீட் தேர்வுக்கான 412 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பிளஸ்-2 படித்து முடிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கென்று தனி தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் 4 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 8 கல்லூரிகளில் 25 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
மத்திய அரசின் போட்டி தேர்வுகள் எந்த மாநிலங்களில் நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிழக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.83.50 லட்சம் மதிப்பில் 6 புதிய வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவும், நவீன கழிப்பிடங்கள், மிதி வண்டி நிறுத்தம் அரங்கம் திறப்பு விழாவும் இன்று நடந்தது.
சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய வகுப்பறைகள், கட்டிடங்களை திறந்து வைத்தனர்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்கு ரூ.27 ஆயிரத்து 250 கோடியே 33 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு மாணவர்களுக்கு ஒரு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உயர் நிலை பள்ளி படிக்கும் மாணவர்கள் மேல் நிலைப்பள்ளியில் எந்த கல்வியை தேர்ந்தெடுத்து படிக்கலாம் என்பது குறித்தும், மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்கள் எந்த கல்லூரியில் என்ன பாடம் எடுத்து படிக்கலாம் என்பது குறித்தும் குறிப்பிட்டிருக்கும். இதன் மூலம் மேல்நிலை கல்வியில் சிறப்பான தொழிற்கல்வியை மாணவர்கள் பெற முடியும்.
மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு தேர்வையும் எதிர் கொள்ளும் வகையில் நீட் தேர்வுக்கான 412 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பிளஸ்-2 படித்து முடிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கென்று தனி தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் 4 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 8 கல்லூரிகளில் 25 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
மத்திய அரசின் போட்டி தேர்வுகள் எந்த மாநிலங்களில் நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews