செய்திகள்
ஜெயலலிதா உருவச்சிலையில் குறைபாடு இருக்கிறது- தம்பித்துரை எம்.பி.
ஜெயலலிதாவின் உருவச் சிலையில் சிறு குறைபாடுகள் இருக்கிறது என்று சென்னை விமான நிலையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கூறினார். #JayalalithaaStatue
ஆலந்தூர்:
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் உருவச் சிலையில் சிறு குறைபாடுகள் இருக்கிறது. அது சரி செய்யப்படும் என்று ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறார். இதில் எந்தவொரு அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை.
காவிரி மேலாண்மை வாரியம் குறித்து முதல்- அமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இது குறித்தான மனுவும் கொடுத்து இருக்கிறார். இதனை பிரதமர் மோடி பரிசீலிப்பதாக கூறி இருக்கிறார்.
பிரதமர் மோடி சொல்லித்தான் துணை-முதலமைச்சர் ஆனேன் என்று ஓ.பி.எஸ். கூறியது குறித்து அவரிடமே கேளுங்கள். அ.தி.மு.க. என்பது ஒரு ஆலமர இயக்கம். அதை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.விடம் தான் இருக்கிறது.
அ.தி.மு.க. தனித்தே தான் ஆட்சி செய்து இருக்கிறது. மத்திய அரசுக்கும் ஒத்துழைப்பு தந்து வருகிறது. இன்னும் 100 ஆண்டுகள் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிதான்.
புதுச்சேரியில் பிரதமர் மோடி பேசும் போது, “2018-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னர் முதல்- அமைச்சராக நாராயணசாமி மட்டும்தான் இருப்பார்” என்று சொல்லி இருப்பது காங்கிரஸ் கட்சியை மட்டும் தான்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் உருவச் சிலையில் சிறு குறைபாடுகள் இருக்கிறது. அது சரி செய்யப்படும் என்று ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறார். இதில் எந்தவொரு அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை.
காவிரி மேலாண்மை வாரியம் குறித்து முதல்- அமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இது குறித்தான மனுவும் கொடுத்து இருக்கிறார். இதனை பிரதமர் மோடி பரிசீலிப்பதாக கூறி இருக்கிறார்.
பிரதமர் மோடி சொல்லித்தான் துணை-முதலமைச்சர் ஆனேன் என்று ஓ.பி.எஸ். கூறியது குறித்து அவரிடமே கேளுங்கள். அ.தி.மு.க. என்பது ஒரு ஆலமர இயக்கம். அதை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.விடம் தான் இருக்கிறது.
அ.தி.மு.க. தனித்தே தான் ஆட்சி செய்து இருக்கிறது. மத்திய அரசுக்கும் ஒத்துழைப்பு தந்து வருகிறது. இன்னும் 100 ஆண்டுகள் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிதான்.
புதுச்சேரியில் பிரதமர் மோடி பேசும் போது, “2018-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னர் முதல்- அமைச்சராக நாராயணசாமி மட்டும்தான் இருப்பார்” என்று சொல்லி இருப்பது காங்கிரஸ் கட்சியை மட்டும் தான்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews