செய்திகள்
சசிகலா முதல்வர் ஆகாததால் தமிழகம் தப்பியது: இளங்கோவன்
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் தமிழகம் தப்பியது என முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பேசியுள்ளார்.
மொடக்குறிச்சி:
ஈரோடு அருகே உள்ள மொடக்குறிச்சியில் காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அம்மையார் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எப்படியும் அடுத்த முதல்வர் ஆகி விடலாம் என கற்பனை கனவில் மிதந்தார் சசிகலா. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கட்டுக்கோப்பாக தொண்டர்களுக்காக வைத்திருந்த அ.தி.மு.க.வை இப்போது சசிகலா தன் வசமாக்கி கொண்டுள்ளார்.
தனக்குதானே அடுத்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என பிரகடனப்படுத்தி அடுத்த முதல்வராகி விடலாம் என துடித்தார்.
ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயிலுக்குள் தள்ளப்பட்டார்.
சசிகலா மட்டும் முதல்-அமைச்சர் ஆகி இருந்தால் தமிழ்நாட்டுக்கு அதைவிட வேறு அவமானம் இருந்திருக்காது. இதனால் தமிழகம் தப்பியது.
ஜெயலலிதாவை பாதுகாத்தோம் உருவாக்கினோம் என்று சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் கூறுகிறார்கள். எம்.ஜி.ஆரை கூட நாங்கள்தான் உருவாக்கினோம் என்று கூட இவர்கள் சொன்னாலும் சொல்வார்கள்.
இப்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆகி இருக்கிறார். இவரது வீட்டில் பல கோடி ரூபாய் பணம் கண்டெய்னர் லாரி மூலம் எடுக்கப்பட்டது. இதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
காமராஜர் ஆட்சி காலத்தில் மதிய உணவு வழங்கினார். ஏழைக் குழந்தைகள் படிக்க முடிந்தது. ஆனால் இன்று கொள்ளைதான் அடிக்கப்படுகிறது.
விழாவில் தெற்கு மாவட்ட துணை தலைவர் எம்.எஸ்.ஞானசேகரன், வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், விவசாய அணி பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஏ.சி.பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு அருகே உள்ள மொடக்குறிச்சியில் காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அம்மையார் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எப்படியும் அடுத்த முதல்வர் ஆகி விடலாம் என கற்பனை கனவில் மிதந்தார் சசிகலா. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கட்டுக்கோப்பாக தொண்டர்களுக்காக வைத்திருந்த அ.தி.மு.க.வை இப்போது சசிகலா தன் வசமாக்கி கொண்டுள்ளார்.
தனக்குதானே அடுத்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என பிரகடனப்படுத்தி அடுத்த முதல்வராகி விடலாம் என துடித்தார்.
ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயிலுக்குள் தள்ளப்பட்டார்.
சசிகலா மட்டும் முதல்-அமைச்சர் ஆகி இருந்தால் தமிழ்நாட்டுக்கு அதைவிட வேறு அவமானம் இருந்திருக்காது. இதனால் தமிழகம் தப்பியது.
ஜெயலலிதாவை பாதுகாத்தோம் உருவாக்கினோம் என்று சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் கூறுகிறார்கள். எம்.ஜி.ஆரை கூட நாங்கள்தான் உருவாக்கினோம் என்று கூட இவர்கள் சொன்னாலும் சொல்வார்கள்.
இப்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆகி இருக்கிறார். இவரது வீட்டில் பல கோடி ரூபாய் பணம் கண்டெய்னர் லாரி மூலம் எடுக்கப்பட்டது. இதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
காமராஜர் ஆட்சி காலத்தில் மதிய உணவு வழங்கினார். ஏழைக் குழந்தைகள் படிக்க முடிந்தது. ஆனால் இன்று கொள்ளைதான் அடிக்கப்படுகிறது.
விழாவில் தெற்கு மாவட்ட துணை தலைவர் எம்.எஸ்.ஞானசேகரன், வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், விவசாய அணி பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஏ.சி.பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.