செய்திகள்
பதவியை ராஜினாமா செய்யுங்கள்: அமைச்சர் கருப்பணனுக்கு தொகுதி மக்கள் வேண்டுகோள்
பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று அமைச்சர் கருப்பணனுக்கு ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஈ ரோடு மாவட்டம் பவானி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருப்பவர் கே.சி.கருப்பணன் இவருக்கும் அத்தொகுதி மக்கள் பலர் ‘வாட்ஸ்-ஆப்’பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில்,
“அம்மாவுக்காக அம்மா முதலமைச்சராக தொகுதி மக்களாகிய நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம். ஆனால் இப்போது நீங்கள் அதை மறந்துவிட்டு கட்சிக்கு சம்பந்தமில்லாத சசிகலாவை ஆதரிக்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது?
இதன் மூலம் நீங்கள் அமைச்சர் மட்டும் அல்ல எம்.எல்.ஏ தகுதியையும் இழந்து விட்டீர்கள். உங்களுக்கு வாக்களித்த வாக்குகளை திரும்ப பெற்றுக் கொள்கிறோம். ஆகவே உடனே ராஜினாமா செய்யுங்கள்” என்று கூறியுள்ளனர்.