செய்திகள்

பெரிய கட்சிகள் வதந்தி பரப்புகின்றன: வைகோ குற்றச்சாட்டு

Published On 2016-12-09 10:32 IST   |   Update On 2016-12-09 15:00:00 IST
ஜெயலலிதா மரணம் பற்றி பெரியகட்சிகள் வதந்தி பரப்புவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

எல்லைதாண்டி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது கைபற்றப்படும் படகுகளுக்கு பெரும் தொகை அபராதம் விதிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதை கண்டித்து வரும் 16ம் தேதி இராமேஸ்வரம் கடற் கரையில் மதிமுக சார்பில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த விசயத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா ராஜீய அழுத்தம் தர வேண்டும். தமிழக மீனவர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவமனையில் முறைப்படி முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து மருத்துமனை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் பல்வேறு பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் தொடர்ந்து வெளியாகின. இந்நிலையில் அவரின் மரணம் குறித்து வதந்திகளை பரப்பி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்த வதந்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை. ஆனால் பெரிய கட்சிகள் ஊர்ஊராக சென்று வி‌ஷமபிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News