செய்திகள்
தமிழ்நாட்டில் மோடி அலையை எதிர்பார்க்க முடியாது: நிர்மலா சீதாராமன் பேட்டி
சென்னை வந்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஆலந்தூர்:
அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் ஒரு சூழ்நிலையை உருவாக்கி இருப்பார்கள். அதற்கு ஏற்ப மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை ஆட்சியில் அமர்த்துவார்கள்.
மோடி அலைப் பற்றி பேசுகிறீர்கள். தமிழ்நாட்டில் மோடி அலையை எதிர்பார்க்க முடியாது. மத்தியில் பிரதமர் மோடி நல்ல ஆட்சி செய்து வருகிறார்.
தொழில் துறையை பொருத்தவரை தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் வந்தபோது வெள்ளத்தால் சிறு தொழிலில் பாதிப்பு அடைந்தது.
தேர்தல் வந்ததால் சில தொழில் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிந்ததும் அந்த திட்டம் தொடரும்.
என்னை பொறுத்தவரை எனது துறை திட்டங்கள் குறித்து சந்தித்து பேச முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் ஒரு சூழ்நிலையை உருவாக்கி இருப்பார்கள். அதற்கு ஏற்ப மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை ஆட்சியில் அமர்த்துவார்கள்.
மோடி அலைப் பற்றி பேசுகிறீர்கள். தமிழ்நாட்டில் மோடி அலையை எதிர்பார்க்க முடியாது. மத்தியில் பிரதமர் மோடி நல்ல ஆட்சி செய்து வருகிறார்.
தொழில் துறையை பொருத்தவரை தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் வந்தபோது வெள்ளத்தால் சிறு தொழிலில் பாதிப்பு அடைந்தது.
தேர்தல் வந்ததால் சில தொழில் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிந்ததும் அந்த திட்டம் தொடரும்.
என்னை பொறுத்தவரை எனது துறை திட்டங்கள் குறித்து சந்தித்து பேச முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.