பெண்கள் உலகம்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கான காரணங்கள் என்ன?

Published On 2018-05-05 11:05 IST   |   Update On 2018-05-05 11:05:00 IST
கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கான அதிகரிப்பதற்கான காரணங்களை பார்க்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. மனைவியாக இருந்தாலும் அவரது அனுமதியின்றி உறவு கொள்ள முயல்வது குற்றம் என்கிற அளவு Marital Rape பற்றி விவாதம் வந்துகொண்டிருக்கும் ஒரு நாகரிகமடைந்த சமூகத்தில், தினந்தோறும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்முறைகள் பெரும் கவலையையும், பதற்றத்தையும் உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.

‘‘பொதுவாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் சிறு வயதில் தாங்களும் உடல் மற்றும் உணர்வு சார்ந்த துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருப்பர். பெற்றோரின் அன்பும், பாதுகாப்பும் இல்லாமல் வளர்ந்திருக்கலாம். மேலும் பெண்களை மதிக்காத சமூகத்தில் வளர்க்கப்பட்டிருக்கலாம்.

பெண்களை இவ்வகையில் அடக்கி / அவமானப்படுத்துவதன் மூலம் அவர்களை இழிவுபடுத்தி ஒடுக்கி விட்டதாகவும், தங்களை சக்திமிக்கவர்களாகவும் இவர்கள் உணர்கிறார்கள். அப்படி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்/ ஒழுங்குபடுத்துவதாகவும், ஆணாதிக்க சிந்தனையிலிருந்தும் பெண் தனக்கு கீழே என்கிற சிந்தனை மேலோங்கி இருப்பதாலும் இப்படி செய்வதுண்டு.



ஊடகங்கள் பெண்களை கவர்ச்சிப் பொருளாகக் காட்டி பாலின ஈர்ப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இதுவே, பெண்கள் மேல் மரியாதை
இல்லாமல், அவர்கள் ஆண்களின் தேவைக்கென படைக்கப்படும் பொருட்கள் எனும் எண்ணத்தை ஆண்கள் மத்தியில் அதிகப்படுத்தி இருக்கிறது.

நிறைவேறாத பாலியல் தேவைகள் காரணமாகவும் பலாத்காரங்கள் நடக்கிறது. இனப்பெருக்கத்துக்கு தயாரான ஆண்கள் தங்களுடைய உடல் தேவை தீராத பட்சத்தில் இது அடக்கி வைக்கப்பட்டு எதிர்பாலினத்தினரின் சம்மதம் இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

செக்ஸ் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருப்பதாலும், மது உள்ளிட்ட போதைக்கு உள்ளாகும்போதும் இதுபோன்ற பலாத்காரங்கள் நிகழ்வதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

பெண்களின் உடை பலாத்காரத்துக்கு காரணமல்ல. இது, ஒரு ஆண் செய்த தவறை அர்த்தம் கற்பிக்கக் கொடுக்கும் ஒரு காரணமே தவிர இதில் உண்மையில்லை. இதைத் தடுக்க எடுக்கும் முக்கிய வழிஇல்லையெனில், தவறு இழைத்தவரை விட்டு பாதிக்கப்பட்டோரையே குற்றம் சொல்ல பழகிவிடுவோம்’’.

Similar News