பெண்கள் உலகம்
null

கர்ப்ப காலத்தில் வீட்டு வேலை செய்வது பாதுகாப்பானதா?

Published On 2024-05-25 06:30 GMT   |   Update On 2024-05-29 04:40 GMT
  • கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை அதிகரிக்கும்.
  • கர்ப்பிணிகள் மலையிலோ, ஏணியிலோ ஏறுவது நல்லதல்ல.

கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு. பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது, அவர்களின் உடல் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது.

கர்ப்பமாக இருக்கும்போது உடலை ஆக்டிவாக வைத்திருப்பதும் முக்கியம். உங்கள் வயிற்றில் இருக்கும் சிறிய குழந்தையை நீங்கள் கூடுதலாக கவனித்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை அதிகரிக்கும். இதனால், கர்ப்பிணிகள் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

கர்ப்பிணிகள் நீண்ட நேரம் நிற்பதால் கால்களில் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக வீக்கம் மற்றும் முதுகுவலியை ஏற்படுத்தும். சமைக்கும்போது அடிக்கடி இடைவெளி எடுத்து, நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். 

கர்ப்பிணி பெண்கள் வீட்டை துடைப்பது, துணி துவைப்பது, தரையை சுத்தம் செய்வது போன்ற வளைந்து கொடுக்கும் வேலைகளை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணிகள் மலையிலோ, ஏணியிலோ ஏறுவது நல்லதல்ல. குழந்தையின் பாதுகாப்பிற்காக, இதுபோன்ற செயல்களை செய்ய வேண்டாம்.

பெரும்பாலான வீட்டு வேலைகள் கர்ப்பத்தின் முதல் சில மாதங்களில் செய்யப்படலாம். இருப்பினும், சில வீட்டு வேலைகளை ஆரம்ப கர்ப்பத்தில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உடலில் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தி பிறக்கும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மீண்டும் மீண்டும் இதே போன்ற பணிகளைச் செய்யும்போது மன அழுத்த ஹார்மோன்கள் அதிகரிக்கும்.

Tags:    

Similar News