லைஃப்ஸ்டைல்

கண்ணை சுற்றியுள்ள கருவளையத்திற்கு இயற்கை வைத்தியம்

Published On 2019-03-07 04:34 GMT   |   Update On 2019-03-07 04:34 GMT
தூக்கமின்மை, கண்களுக்கு அதிக வேலைப்பளு, டென்ஷன் போன்ற காரணங்களால் கண்ணில் கருவளையம் ஏற்படுகின்றது. கண்ணை சுற்றியுள்ள கருவளையத்திற்கு இயற்கை வைத்தியத்தை பார்க்கலாம்.
தூக்கமின்மை, அனீனியா, பாரம்பரியம், கண்களுக்கு அதிக வேலைப்பளு, டென்ஷன் போன்ற காரணங்களால் கண்ணில் கருவளையம் ஏற்படுகின்றது.

* இரும்புச் சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். கரட், பீட்ரூட் ஜீஸ், கீரை வகைகள், பப்பாளி, மாம்பழம் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய், உப்புக்கலக்காத எண்ணெய் தலா 1/2 டீஸ்பூன் எடுத்து கண்களின் உள்ளே போய்விடாதபடி சுண்டு விரலால் மெதுவாக மசாஜ் செய்யவும்.

* விட்டமின் ஏ,விட்டமின் கேப்சூல்களில் உள்ள எண்ணெயை கண்களை சுற்றித்தடவி பத்து நிமிடம் போனதும் பஞ்சினால்துடையுங்கள்.

* கற்றாழையின் சோற்றுப்பகுதியை,பன்னீருடன் கலந்து கண்களுக்கடியில் தடவி 10 நிமிடத்துக்கு பிறகு கழுவலாம்.

* விளக்கெண்ணைய்யை கண்களின் மீது தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள்.  

இவ்வாறு செய்து வந்தால் கண்ணின் கருவளையத்தை விரட்டி விடலாம்.
Tags:    

Similar News