உடற்பயிற்சி

முதுகெலும்பை வலுவாக்கும் குப்த பத்மாசனம்

Published On 2022-12-01 05:36 GMT   |   Update On 2022-12-01 05:36 GMT
  • கைகள், கால் மூட்டியை வலுவாக்கும்.
  • மனதிற்கும் அமைதி கிடைக்கும்.

செய்முறை

விரிப்பில் பத்மாசனத்தில் அமரவும். பின்னர் மெதுவாக கால்களை பிரிக்காமல் முன்னால் குப்புற படுக்கவும். இப்போது உங்கள் கால்கள் பத்மாசன நிலையில் இருக்கும். தடையை தரையில் படும்படி வைக்கவும். இந்த நிலையில் கைகளை முதுகுக்கு பின்னால் கொண்டு சென்று நமஸ்காரம் போஸ் செய்யவும். இந்த நிலையில் சில நிமிடங்கள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்ய வேண்டும். இயல்பான சுவாசத்தில் பயிற்சி செய்யவும்.

பலன்கள்

இந்த ஆசனம் செய்வதால் உடலுக்கும், மனதிற்கும் அமைதி கிடைக்கும். அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் உணர்ச்சி சமநிலையைத் தூண்டுவதால், இது ஒரு தளர்வு அல்லது தியான போஸாகப் பயன்படுத்தப்படலாம்.

இந்த ஆசனம் முதுகெலும்பின் குறைபாடுகளை சரிசெய்கிறது. கைகள், கால் மூட்டியை வலுவாக்கும்.

கடுமையான கணுக்கால், முழங்கால், இடுப்பு அல்லது கீழ் முதுகில் காயம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

Tags:    

Similar News