கால்பந்து

இந்திய கால்பந்து அணிக்கு கேப்டன் நியமனம்

Published On 2024-06-11 19:51 IST   |   Update On 2024-06-11 19:51:00 IST
  • புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணி, மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றுக்கு முன்னேறலாம்.
  • இந்திய அணி இதுவரை மோதிய முதல் 5 போட்டியில் 5 புள்ளி பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

தோகா:

அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் 2026ல் நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி 'ஏ' பிரிவில், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது.

புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணி, மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றுக்கு முன்னேறலாம். இந்திய அணி இதுவரை மோதிய முதல் 5 போட்டியில் 5 புள்ளி பெற்று 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் கத்தார் (13) உள்ளது. கடைசி இரு இடத்தில் ஆப்கானிஸ்தான் (5) குவைத் (4) உள்ளன.

இந்திய அணி, தனது கடைசி போட்டியில் கத்தார் அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது. இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. ஒருவேளை 'டிரா' அல்லது தோல்வியடைந்தால், குவைத்-ஆப்கானிஸ்தான் மோதும் போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தி வந்த சுனில் சேத்ரி அண்மையில் அவரது ஓய்வு முடிவை அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய கால்பந்து அண்யின் கேப்டனாக கோல் கீப்பர் குர்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனுபவ கோல்கீப்பர் குர்பிரீத் சிங் (32 வயது) இதுவரை இந்தியாவுக்காக 72 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

Tags:    

Similar News