வழிபாடு

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் மாசி மாத தெப்ப உற்சவம் 20-ந்தேதி தொடங்குகிறது

Published On 2023-02-20 01:21 GMT   |   Update On 2023-02-20 01:21 GMT
  • இந்த விழா 3 நாட்கள் நடக்கிறது
  • இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற தலமாகவும் விளங்கி வருகிறது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத தெப்ப உற்சவம் 3 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாசி மாத தெப்ப உற்சவம் வருகிற 20-ந்தேதி தொடங்கி 22-ந் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.

தெப்ப திருவிழாவில் உற்சவர் வைத்திய வீரராகவர் சமேதராக ஸ்ரீதேவி, பூ தேவியுடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவில் குளத்தில் தெப்பத்தில் எழுந்தருள்வார்.

இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தெப்பக்குளத்தில் தெப்பம் கட்டும் பணியில் ஊழியர்கள் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

தெப்ப திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். தெப்ப திருவிழாவில் திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News