வழிபாடு
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் வசந்த உற்சவ விழா
- திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.
- வசந்த உற்சவம் விழா வருகிற 10-ந் தேதி மாலை நிறைவு பெறுகிறது.
திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வசந்த உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு இன்று மாலை திருக்குளம் அருகே உள்ள பங்களா தோப்பில் வசந்த விழா தொடங்குகிறது.
மாலை 6 மணிக்கு கேடயத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளி திருக்குளம் வீதிகள் வழியாக சென்று வசந்த மண்டபத்துக்குள் மேளதாளம் முழங்க எழுந்தருள்வார்.
அங்கு வேத மந்திரங்களுடன் திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அதன் பின்னர் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 4 வீதிகள் வழியாக சுவாமி உலா வந்து கோவிலுக்குள் சென்றடைவார்.
வசந்த உற்சவம் விழா வருகிற 10-ந் தேதி மாலை நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.