வழிபாடு

திருச்சானூர் பத்மாவதி கோவிலில் வசந்தோற்சவம்: 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடக்கிறது

Published On 2023-04-21 06:42 GMT   |   Update On 2023-04-21 06:42 GMT
  • மே 5-ந்தேதி தங்கத்தேரோட்டம் நடக்கிறது.
  • ஆர்ஜித சேவைகள் மே 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை ரத்து.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் அடுத்த மாதம் (மே) 4-ந்தேதியில் இருந்து 6-ந்தேதி வரை வசந்தோற்சவம் நடக்கிறது. இதற்காக மே மாதம் 2-ந்தேதி காலை 6 மணியில் இருந்து காலை 9 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணியும், 3-ந்தேதி மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணமும் நடக்கிறது.

விழாவின் ஒரு பகுதியாக மே மாதம் 5-ந்தேதி காலை 9.10 மணிக்கு தங்கத்தேரோட்டம் நடக்கிறது. வசந்தோற்சவத்தின் 3 நாட்களும் கோவில் அருகில் உள்ள சுக்கரவாரித் தோட்டத்தில் மதியம் 2.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், இரவு 7.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை கோவிலின் நான்கு மாட வீதிகளில் பத்மாவதி தாயார் ஊர்வலமும் நடக்கிறது.

கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தால் மே மாதம் 3-ந்தேதி கல்யாணோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை, அஷ்டோத்தர சதகலசாபிஷேகம், மே மாதம் 5-ந்தேதி லட்சுமி பூஜை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் மே மாதம் 2-ந்தேதியில் இருந்து 6-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News