வழிபாடு

திருச்சானூரில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நாளை நடக்கிறது

Published On 2023-05-01 08:53 GMT   |   Update On 2023-05-01 08:53 GMT
  • வாசனை பொருட்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது.
  • புதன்கிழமை மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் நடக்கிறது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் வருகிற 4-ந்தேதியில் இருந்து 6-ந்தேதி வரை நடக்கிறது. இதற்காக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியில் இருந்து காலை 9 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. அதில் கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகிறது.

அதன் பிறகு நாமகொம்பு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலி கட்டை ஆகிய வாசனை பொருட்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது.

இதையடுத்து காலை 9 மணியில் இருந்து பக்தர்கள் பத்மாவதி தாயாரை தரிசிக்க கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் நடக்கிறது.

Tags:    

Similar News