வழிபாடு

ஏழுமலையானின் தங்கப்பாதம் திருச்சானூரில் ஊர்வலம்

Published On 2022-11-26 11:12 IST   |   Update On 2022-11-26 11:12:00 IST
  • தங்கப் பாதங்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.
  • பத்மாவதி தாயாருக்கு தங்கப்பாதங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று இரவு கருட வாகன வீதிஉலா நடந்தது. அதில் எழுந்தருளி உலா வரும் உற்சவர் பத்மாவதி தாயாரின் பாதங்களில் பொருத்துவதற்காக ஏழுமலையானின் தங்கப் பாதங்கள் திருமலையில் இருந்து திருச்சானூருக்குக் கொண்டு வரப்பட்டது.

திருச்சானூரில் உள்ள பசப்பு மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட்ட தங்கப் பாதங்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க பத்மாவதி தாயார் கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் பத்மாவதி தாயாருக்கு தங்கப்பாதங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News