வழிபாடு

திருத்தணி முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம்: ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

Published On 2023-03-05 07:14 GMT   |   Update On 2023-03-05 07:14 GMT
  • திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக உள்ளது.
  • தினமும் உற்சவர் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த, 25-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு நேரங்களில் உற்சவர் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று யாளி வாகனத்தில், ஆறுமுக சுவாமி கோவிலுக்கு உற்சவர் சென்றடைந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று 10-வது நாள் விழாவாக முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது. அ காலை 4.30 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News