வழிபாடு

பூம்புகார் சாயாவனேஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

Published On 2023-06-12 06:27 GMT   |   Update On 2023-06-12 06:27 GMT
  • பைரவருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பூம்புகார் சாயாவனத்தில் சாயாவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் காசிக்கு இணையான கோவில்களில் ஒன்றாகும். நேற்று அஷ்டமியையொட்டி இக்கோவிலில் உள்ள பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

இதில் பைரவருக்கு பால், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பைரவருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News