வழிபாடு

ஆண்டாள் கோவிலில் அக்கார அடிசல் படைத்து சிறப்பு வழிபாடு

Published On 2023-01-12 04:18 GMT   |   Update On 2023-01-12 04:18 GMT
  • 100 லிட்டர் பால், 5 லிட்டர் நெய்யில் அக்கார அடிசல் தயார் செய்யப்பட்டது.
  • 100 லிட்டர் பால், 5 லிட்டர் நெய்யில் அக்கார அடிசல் தயார் செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கூடாரவல்லியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது ஆண்டாளுக்கு அக்கார அடிசல் என்ற உணவுப்பொருள் தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

100 லிட்டர் பாலில், 5 லிட்டர் நெய்யில் பிரத்யேகமாக அக்கார அடிசல் தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கு படைக்கப்பட்டது. இதையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

அப்போது பக்தர்களுக்கு அக்கார அடிசல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News