வழிபாடு

நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாரிவேட்டை வைபவம் கண்டருளிய காட்சி.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாரிவேட்டை

Published On 2023-01-17 06:11 GMT   |   Update On 2023-01-17 06:11 GMT
  • நம்பெருமாளுக்கு சிறப்பு திருவாராதனங்கள் நடந்தன.
  • திரளான பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் நாட்களில் சிறப்பு புறப்பாடுகளும், வைபவங்களும் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் நம்பெருமாள் உபயநாச்சியார் சகிதம் சங்கராந்தி மண்டபம் சென்று வந்தார்.

நேற்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் உள்ள கனு மண்டபம் வந்து சேர்ந்தார்.

அங்கு அவருக்கு சிறப்பு திருவாராதனங்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள் மாலை 4.30 மணியளவில் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு, பாரிவேட்டை நடத்தியபடி தெற்குவாசல் பகுதி ராஜகோபுரம் வரை வந்து பின்னர் கோவிலுக்கு திரும்பினார்.

இதில் திரளான பக்தர்கள் தெற்குவாசல் கடைவீதியில் இருபுறங்களிலும் காத்திருந்து, குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள், கைங்கர்யபரர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News