வழிபாடு

சிவ லிங்கங்களும் பயன்களும்

Published On 2023-06-16 06:39 GMT   |   Update On 2023-06-16 06:39 GMT
  • சிவம் என்றால் மங்களம்.
  • லிங்கம் என்றால் அடையாளம்.

சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது.

சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம்.

சிவ ஆகமப்படி 16 வகையான பொருள்களால் லிங்க ரூபம் செய்து வழிபடுதல் பெரும் சிறப்பென்று ரிஷிகள் கூறுகின்றனர்.

1. புற்றுமண் லிங்கம்: முத்தி

2. ஆற்று மணல் லிங்கம்: பூமிலாபம்

3. பச்சரிசி லிங்கம்: பொருள் பெருக்கம்

4. சந்தன லிங்கம்: எல்லா இன்பங்கள்

5. மலர்மாலை லிங்கம்: நீண்ட வாழ்நாள்

6. அரிசி மாவு லிங்கம்: உடல் வலிமை

7. பழம் லிங்கம்: நல்லின்ப வாழ்வு

8. தயிர் லிங்கம்: நல்லகுணம்

9. தண்ணீர் லிங்கம்: எல்லா மேன்மை

10. சோறு (அன்னம்) லிங்கம்: உணவுப்பெருக்கம்

11. முடிச்சிட்ட நாணல் (கூர்ச்சம்) லிங்கம்: முக்தி

12. சர்க்கரை, வெல்லம் லிங்கம்: விரும்பிய இன்பம்

13. பசுவினசாணம் லிங்கம்: நோயற்ற வாழ்வு

14. பசுவெண்ணெய் லிங்கம்: மனமகிழ்ச்சி

15. உருத்திராட்ச லிங்கம்: நல்ல அறிவு

16. திருநீற்று (விபூதி) லிங்கம்: எல்லா வகை செல்வம்.

Tags:    

Similar News