வழிபாடு

தஞ்சை பெரியகோவிலில் நவராத்திரி கலைவிழா இன்று தொடங்குகிறது

Published On 2022-09-25 08:05 GMT   |   Update On 2022-09-25 08:05 GMT
  • இன்று தொடங்கி அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது.
  • நவராத்திரி நாட்களில் தினமும் பெரிய நாயகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது.

தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலை விழா நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலை விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.

நவராத்திரி விழாவின் போது தினமும் பெரிய நாயகி அம்மனுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும், அதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

விழாவின் முதல் நாளான இன்று பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் நடைபெறுகிறது. நாளை (திங்கட்கிழமை) மீனாட்சி அலங்காரமும், 27-ந் தேதி சதஸ் அலங்காரமும், 28-ந் தேதி காயத்திரி அலங்காரமும், 29-ந் தேதி அன்னபூரணி அலங்காரமும் நடைபெறுகிறது. 30-ந் தேதி பெரியநாயகி அம்மனுக்கு கெஜலட்சுமி அலங்காரமும், 1-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 2-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந் தேதி விஜயதசமி அலங்காரமும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News