வழிபாடு

நாகூர் தர்காவில் சந்தனம் அரைக்கும் பணி தொடங்கியது

Published On 2022-12-30 06:16 GMT   |   Update On 2022-12-30 06:16 GMT
  • உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா நாகூரில் உள்ளது.
  • சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது.

நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்கா கந்தூரி விழா கடந்த 24-ந்தேதி கொடியற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 2-ந் தேதி(திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

இதையொட்டி தர்கா உள்புறத்தில் சந்தனம் அரைக்கும் பணி நேற்று மாலை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு தர்கா மேனேஜிங் டிரஸ்டி செய்யது காமில் சாஹிப் தலைமை தாங்கினார்.

பரம்பரை டிரஸ்டி அபுல் பதஹ் சாஹிப் முன்னிலையில் பரம்பரை டிரஸ்டிகள் கலந்து கொண்டு சந்தனம் அரைத்தனர்.

Tags:    

Similar News