வழிபாடு

ராஜகோபுரம் அமைக்கும் பணிக்காக கற்களில் நேர்த்தியாக வரி அமைக்கப்பட்ட போது எடுத்த படம்.

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.5¼ கோடியில் ராஜகோபுரம் அமைக்கும் பணி

Published On 2023-06-10 06:06 GMT   |   Update On 2023-06-10 06:06 GMT
  • மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.
  • 7 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜகோபுரம் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் கோவில் நிதியில் இருந்து 7 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக திருப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆய்வு செய்து ராஜகோபுரம் அமைக்கும் பணி யை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து கோவில் சார்பில் ராஜகோபுர பணிக்காக உபயதாரர்களின் உதவியை நாடினர். கோவை, திருப்பூர், ஈரோடு பகுதி உபயதாரர்கள் ராஜகோபுரம் அமைப்பதற்காக ரூ.5 கோடியே 30 லட்சம் நன்கொடை வழங்கினர்.

இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின், 7 நிலை ராஜகோபுர திருப்பணிகளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.முரளிதரன் வழிகாட்டுதலின் பேரில், செயற்பொறியாளர் மதிவாணன், கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் மண்டல ஸ்தபதி ராமகிருஷ்ணன் தலைமையில் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் ராஜகோபுர ்பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக கற்கள் கொண்டு வரப்பட்டு 2-வது பகுதி பாத வர்க்கம் அமைப்பதற்காக கற்களில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வரி நேர்த்தியாக அமைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News