வழிபாடு

கருணை வடிவான அங்காளம்மன்

Published On 2023-07-20 06:26 GMT   |   Update On 2023-07-20 06:26 GMT
  • மேல்மலையனூரில் அம்மன் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றி இருக்கிறார்.
  • தண்டகாருண்யம் என்ற சக்தி பீடமாகியது.

தீமையை அழிக்க ஆக்ரோஷமாக உருவம் எடுத்தாலும், அன்னை கருணையே வடிவானவள். இமவான் மகளாக இருந்தவள் தன் கணவனைக் காப்பாற்ற அங்காளம்மனாக உருவெடுத்தார். மேல்மலையனூரில் அம்மன் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றி இருக்கிறார். தன் கணவனைப் பிரிந்து அவரைக் காப்பாற்ற அன்னை வந்து இங்கு குடி கொண்டதால் இங்கு கணவனைப் பிரிந்தவர்கள் வந்து அம்மனிடம் பிரார்த்தனை செய்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.

தட்சன் தன் கணவனை அழைக்காமல் யாகம் செய்ததால் கோபம் அடைந்த தாட்சாயணி, அந்த யாக குண்டத்தில் விழுந்து தன்னை மாய்த்துக் கொண்டார். அந்த உருவமற்ற அம்சமே அங்காளி ஆகும். அங்காளியைத் தன் தோளில் சுமந்து ஆவேசமாக நடனமாடினார் ஈசன். அப்போது அம்பிகையின் கை துண்டாகி கீழே விழுந்தது.

அது தண்டகாருண்யம் என்ற சக்தி பீடமாகியது. அதில் ஒரு பகுதியே மேல்மலையனூர். அம்பிகை யாகத்தில் சாம்பலான இடம் என்பதால் இங்கு சாம்பலே பிரசாதமாக வழங்கப்படுகிறது. அம்பிகையின் அருட் திருவருள் கடலெனப் பரந்தது என்றாலும், தன்னை நம்பி வரும் அடியவரின் துயர் நீக்கும் தன்மையே பெரிதாகப் போற்றப்படுகிறது.

அம்பிகையின் சக்தியாலேயே இவ்வுலகம் இயங்கினாலும் அனைத்துப் பெருமைகளையும் இறைவனுக்கு அளித்து விட்டு அமைதியாகப் புன்னகை பூக்கிறாள் அம்பாள்.

Tags:    

Similar News