வழிபாடு

சந்திர கிரகணத்தையொட்டி பக்தர்கள் ராகு-கேது பூஜையில் ஈடுபட்ட காட்சி.

சந்திர கிரகணத்தையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் நடை சாத்தப்படாமல் சிறப்பு பூஜை

Published On 2022-11-09 04:17 GMT   |   Update On 2022-11-09 04:17 GMT
  • ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு கிரகண சாந்தி அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
  • பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ஆந்திர மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் நடை சாத்தப்பட்டது. ஆனால் சிவ ஷேத்திரமான ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் மட்டும் சந்திர கிரகண சமயத்தில் நடை சாத்தப்படாமல் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

பிற்பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 மணிவரை சந்திர கிரகணம் இருந்தது. இந்த கிரகண நேரத்தில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஞான பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு கிரகண சாந்தி அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. மூலவரான ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு நவகிரக கவசம் அலங்கரிக்கப்படுவதால் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மீது கிரகண கால சமயத்தில் எந்தவித தாக்கமும் ஏற்படாது என்ற காரணத்தினால் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடத்துவதாக கோவில் வேதப்பண்டிதர்கள் தெரிவித்தனர்.

மேலும் சந்திரகிரகண சமயத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மற்றும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை தரிசனம் செய்தால் அனைத்து விதமான தோஷங்கள் நிவர்த்தி அடையும் என்பதால் சந்திரகிரகணமான நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சந்திர கிரகண சமயத்தில் பரணி போன்ற நட்சத்திரம் கொண்டவர்கள் சந்திர கிரகண சமயத்தில் சந்திரனை பார்க்க கூடாது என்றும், இதனால் தீயவை நிகழும் என்பவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்து கொண்டால் அனைத்தும் நல்லதாக நடக்கும் என்றும், தோஷம் நீங்கும் என்றும் கோவில் வேத பண்டிதர் அர்த்தகிரி சுவாமி தெரிவித்தார்.

Tags:    

Similar News