வழிபாடு

கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் பத்தாம் உதய பொங்கல் வழிபாடு: ஏராளமான பெண்கள் பங்கேற்பு

Published On 2023-04-25 07:06 GMT   |   Update On 2023-04-25 07:06 GMT
  • பொங்கல் வழிபாடு கோவில் வளாகத்தில் நடத்தப்பட்டது.
  • மண் பானைகள் மற்றும் வெண்கல பானைகளில் பொங்கலிட்டு வழிபட்டு நேர்த்திகடன் செலுத்தினர்.

குமரி மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படும் பிரசித்தி பெற்ற கோவிலான கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பத்தாம் நாள் பொங்கல் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

இந்த பொங்கல் வழிபாட்டில் தூக்கநேர்ச்சை நடத்திய பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வேண்டி பொங்கலிட்டு வழிபடுவது சிறப்பம்சம் ஆகும். அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் வழிபாடு நேற்று கோவில் வளாகத்தில் நடத்தப்பட்டது. காலை 10.15 மணிக்கு பண்டார அடுப்பில் கோவில் தந்திரி கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன் போற்றி தீ மூட்டி பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைத்தார்.

அதைதொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் கோவிலை சுற்றியுள்ள இடங்களில் மண் பானைகள் மற்றும் வெண்கல பானைகளில் பொங்கலிட்டு வழிபட்டு நேர்த்திகடன் செலுத்தினர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News